Monday, August 14, 2023

காலை எழுந்தவுடன்...

புலருகையில் புல் முத்தமிடும் புதுக்காலையில்
பூங்காற்று பூச்சொரியும் இளவேனிலின் இதத்தை
மிதச்சூட்டில் மனம் வருடும் தெளித் தேநீரின்
உதடு படா உள்செல்லலில் உணர்ந்ததுண்டோ?

அருந்துகையில் அகம் நனைக்கும் அந்நீரில்
இழையோடும் இனிப்பு உன்னதம் உணர்த்தும்
அந்நாளின் அல்லல், ஆவல், ஆக்கங்களை
ஆர்வமாய் எதிர்கொள ஆற்றல் தரும் அவ்வமிர்தம்!

2 comments:

Rant. Rave. Praise. Scold. Tease. Pour your mind.